Friday, February 5, 2010

கரு வளர்ச்சிக்கு உதவும் “வயாகரா”

வயாகரா மாத்திரைக்கு “செக்ஸ்” உணர்வை தூண்டும் சக்தி உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இது தாயின் வயிற்றில் உள்ள கரு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். வயாகரா மாத்திரையை கருவுற்றிருந்த ஆட்டுக்கு கொடுத்து பரிசோதித்தனர். இதில் ஆட்டின் கரு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு உதவியது.

கரு வளர்ச்சிக்கு அமினோ ஆசிட், மற்றும் நியூட்ரின் சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை வயாகரா மாத்திரையில் இருக்கின்றன. எனவே இந்த மாத்திரை கருவளர்ச்சிக்கு உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கருவுற்ற பெண்கள் இதை பயன்படுத்துவது பற்றி இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அந்த ஆய்வு முடிந்த பிறகு கர்ப்பிணி பெண்களும் வயாகரா மாத்திரை சாப்பிட சிபாரிசு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: