
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி போராடி வருகிறது. இக்கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்து வெளியேறினார். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு எத்தனையோ போராட்டம் நடத்தி விட்டோம். எந்த பலனும் இல்லை. இதனால் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் ஒரு நாள் 30 ஆயிரம் தற் கொலைப்படை தொண்டர்களுடன் அமர்ந்து நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன், எங்கள் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment