
ஐதராபாத்:ஐ.சி.எல்., "டுவென்டி-20' தொடரில் ஐதராபாத் ஹீரோஸ் அணி, தாகா வாரியர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது.கபில்தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) சார்பில் இந்தியன் சாம்பியன்ஷிப் "டுவென்டி-20' தொடர் ஐதராபாத்தில் நடக்கிறது. 7வது போட்டியில் ஐதராபாத் ஹீரோஸ், தாகா வாரியர்ஸ் அணிகள் மோதின.
முதல் சதம்: "டாஸ்' வென்று முதலில் பேட் செய்த தாகா வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. தாகா வாரியர்ஸ் அணியின் அலோக் கபாலி அதிரடியாக ஆடி 60 பந்தில் 5 சிக்சர், 11 பவுண்டரி உட்பட 100 ரன்கள் எடுத்தார். இது தான் ஐ.சி.எல்., வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதம். இதற்கு முன் லாகூர் பாட்ஷாஸ் அணியின் ஹசன் ராசா
அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்திருந்தார். "மிடில்-ஆர்டர்' அபாரம்: பின்னர் களமிறங்கிய ஐதராபாத் ஹீரோஸ் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய ஐதராபாத் ஹீரோஸ் அணியின் பின்னி(30), போஜே(31), ஹாரிஸ்(37) பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
சதம் விளாசிய அலோக் கபாலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment