
பெர்லின்:வனவிலங்குப்பூங்காவில், பாம்பு கூண்டை சுத் தம் செய்து கொண்டிருந்த பெண் ஊழியர் தலையை மலைப் பாம்பு விழுங்க முயற்சித்தது. ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கர்ட் மாகாணத்தில் உதிங்க்டன் என்ற இடத்தில் வனவிலங் குப்பூங்கா உள்ளது. இங்குள்ள விலங்குகளில் 24 வயது மலைப் பாம்பும் உள்ளது.சமீபத்தில் வழக்கம் போல, பாம்புக் கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் பெண் ஊழியர் ரெனட்.
அப்போது, மலைப் பாம்பு திடீரென அவர் தலையை விழுங்க முயற்சித்து வாயால் இழுக்க முயற்சித்தது. தலை முக்கால் பகுதி உள்ளே போன நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல்,கூக்குரலிட்டபடி,தன் இரண்டு கைகளையும் பாம்பு வாயில் விட்டு தலையை மீட்க முயன்றார். ஆனால், முடியவில்லை.தன் இரு கைகளின் கட்டை விரல்களையும் பாம்பின் வாயில் இரு பக்கமும் கீழ்ப்பக்கமாக அழுத் தியபடி இருந்தார். அவர் கத்தியதை பார்த்த ஊழியர் கள் சிலர் ஓடி வந்து அவரை மீட்க முயற்சித்தனர். அப்போதும்
ரெனட் தலையை மலைப்பாம்பு விடுவதாக இல்லை.
வனவிலங்கு அதிகாரிகள் அப்போது ஒரு சமயோசித முடிவை எடுத்தனர்.தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் தண்ணீர் குழாயில் இருந்து நீண்ட பைப்பை செருகி, பாம்பின் வாயில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தனர்.அடுத்த சில நொடிகளில், ரெனட் தலையை பாம்பு விட்டுவிட்டது. தலையில் பல இடங்களில் அவருக்கு பாம்பின் பற்கள் பட்ட கீறல்கள் இருந்தன.உடனே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"பாம்புக்கு மனிதவாடை பிடிக்கும்; அதனால், ரெனட் தலையை அது விடாமல் இருந்தது. ஆனால், தண்ணீரை பீயச்சி அடித்ததால், அதற்கு வாசனை உணர்ச்சி போய் விட்டது. இதனால்தான் , ரெனட் தலையை அது விட்டு விட்டது' என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment