
மும்பை: பத்து ஆண்டுக்கு மேல் விலகி இருந்த மாஜி மனைவி, திடீரென மகன் மீது உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றாள். தத்து கொடுக்கப்பட்ட மகன் நிலை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: http://www.dinamalar.com
No comments:
Post a Comment