Thursday, November 12, 2009

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்


கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் அங்குள்ள நிலைமைகள் சீராகி நாடு முன்னேற அதிகாரிகளும், அந்த நாட்டு மக்களும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.

போரின் போது வெளியேறிய மக்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடத்திலேயே குடியமர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழர்களுக்கான அனைத்து உரிமையையும் வழங்க வேண்டும்.

அங்குமனித உரிமைகள் மீறப்படக்கூடாது இதற்கு இலங்கையில் அனைத்து பிரிவு மக்களும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். இலங்கையின் முன்னேற்றத்திற்காக சர்வதேச சமுதாயங்கள் பொருளாதார உதவி உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு போப் ஆண்டவர் கூறியுள்ளார்.

No comments: