Thursday, January 28, 2010

சானியாமிர்சா திருமண நிச்சயதார்த்தம் ரத்து


இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா. கிராண்ட்சிலாம் போட்டிகளில் 4-வது சுற்று வரை நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர்.

சானியாமிர்சாவுக்கும், நீண்டகால நண்பரான முகமது சோரப்புக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு டென்னிசுக்கு முழுக்கு போட்டு விடுவதாக சானியா அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சானியாவுக்கும், முகமது சோரப்புக்கும் இடையேயான திருமண நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாக சானியாவின் தந்தையான இம்ரான் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, இரு குடும்பங்களும் 50 ஆண்டுகளாக பழகி வருகிறோம். ஜோடிகள் பிரிந்துவிட்டாலும் எங்களது நட்பு தொடரும் என்றார்.

திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து சானியா மிர்சா கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு இருவரும் இணக்கமாக வாழ முடியாது என்பதை உணர்ந்தோம் என்றார்.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். கோலாம்பூரில் நடைபெறும் ஆசிய ஒசியானியா பெடரேசன் கோப்பை போட்டியில் பங்கேற்க நாளை அவர் செல்கிறார். முகமது சோரப் தற்போது இங்கிலாந்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு சானியா விளையாடுவதை சோரப் விரும்பவில்லை. இதை சானியா ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால்தான் திருமணம் முறிந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது.

1 comment:

Anonymous said...

மரைக்கானுங்க அப்படிதான் பொன்னுங்க அடிமையாயிருக்கணும்

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
திருந்த பாருங்கடா.......