Monday, October 13, 2008

அடுத்தவர் புகையை சுவாசித்தாலும் கேன்சர்!


இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் புகை பிடிப்பது அடுத்தவர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாலே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.அடுத்தவர் ஊதும் புகை பற்றிய பொதுவான சந்தேகங் களுக்கு இங்கு விடைகள் இடம்பெறுகின்றன.


அடுத்தவர் வெளியிடும் புகை கெடுதலானதா?


ஆம். அடுத்தவர்கள் புகை பிடிக்கும் போது வெளியாகும் புகை, நம் உடலுக்கு தீங்கானது. நாம் புகைபிடிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அந்த விளைவுகள் அடுத்தவர் புகையிலும் உண்டு.



புகையில் என்னென்ன நச்சுகள் உள்ளன?

சிகரெட் புகையில் 4 ஆயிரம் வகையான நச்சுத் தன்மை கொண்ட துகள்கள் உள்ளன. நிகோடின், பென்சீன், பென்சாபைரீன், கார்பன் மோனாக்சைடு, அம்மோனியா, ஹைட்ரஜன் சயனைடு இவற்றில் முக்கியமானவை. சிகரெட்டில் உள்ள 60 வகையான நச்சுகள் கேன்சர் உருவாவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. சுவாசக்குழலில் உள்ள மெல்லிய திசுக்களுக்கு அவை எரிச்சலூட்டுகின்றன. கேன்சர் ஏற்பட காரணமாகன கார்சினோஜன் சிகரெட் புகையில் உள்ளதால், நச்சுத்தன்மை மிக்க ஆஸ்பிடாஸ், ஆர்சனிக் ஆகியவற்றுடன் இப்புகை சமமானதாக ஒப்பிடப்படுகிறது.



அடுத்தவர் புகையை சுவாசிப்பதன் ஆபத்துகள் என்ன?
அடுத்தவர் புகையை 30 நிமிடம் சுவாசித்தாலே இதயத்தின் வழியாக செல்லும் ரத்த ஓட்டம் கூட குறையும் அபாயம் உள்ளது. தலைவலி, இருமல், கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் இதுபோன்று புகையை சுவாசிக்கும் போது அவர்களது நுரையீரல் செயல்பாடு குறைந்தது.


நீண்ட காலம் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
புகை பிடிக்காதவர் கூட, அடுத்தவர்கள் புகையை சுவாசிக்க நேரிடும் போது, 25 சதவீத மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினைப்பெறுகிறார்கள். 50 -60 சதவீதம் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் வாய்ப்புள்ளது. வீட்டிலுள்ள குழந்தைகளின் மனவளர்ச்சி யிலும் புகை கேடு விளைவிக்கிறது. பொது இடங்களில் புகை பிடிக்கும் போது அது அடுத்தவரை பாதிக்கிறது. ஒரு குடும்பத்தில் இருவர் புகைபிடித்தால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு சுவாசம்
தொடர்பான பிரச்னை வர 72 சதவீத வாய்ப்புள்ளது.


வேறு எந்த நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை
செய்யப்பட்டுள்ளது?


உலகிலேயே முதன்முறையாக பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது ன்று தடை செய்த இடம் வாடிகன்தான். 1590ம் ஆண்டில் போப் ஏழாம் அர்பன் இத்தடையை விதித்தார். 1600 களில் ஆஸ்திரியா, 1876ல் நியூசிலாந்து, 1941ல் ஜெர்மனி பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதித்தன. சமீபத்தில் நார்வே 2004, இத்தாலி, ஸ்வீடன் 2005, பிரிட்டன் 2006 மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பொது இடங்களில் புகைக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது.



தடை ஏன்? :


பொதுமக்களின் உடல் நலன் மற்றும் நாட்டின் சுகாதார செலவு கியவற்றை கருத்தில் கொண்டே பொது இடங்களில் புகைபிடிக்க தடை திக்கப்பட்டுள்ளது. பிறரது உடல் நலனை கெடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க திக்கப்பட்டுள்ள
தடையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.






No comments: