Friday, October 17, 2008

மொபைலில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு தோல் நோய் வரும் : பிரிட்டிஷ் டாக்டர்கள் தகவல்


லண்டன் : இப்போது மொபைல் போன் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாகி விட்டது. அது இல்லை என்றால் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு முக்கிய பொருளாகி விட்டது. ஆனால் அதை உபயோகிப்பவர்களுக்கு தோல் அரிப்பு நோய் வரும் வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் டெர்மடாலஜிஸ்டுகள் அசோசியேஷனை சேர்ந்த டாக்டர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில் நிக்கல் கோட்டிங் இருக்கும் மொபைல் ஹேண்ட்செட்டை உபயோகிப்பவர்களுக்கு நிக்கலால் ஏற்படும் அலர்ஜி காரணமாக முகம் மற்றும் காது பகுதியில் தோல் அரிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆராய்ச்சியில், அதிக நேரம் மொபைலில் பேசுபவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு நிக்கல் அலர்ஜி இருக்கிறது. மொபைல் போன் ஹேண்ட்செட்களில் பட்டன்கள், ஸ்கிரீனின் விளிம்பு போன்றவற்றில் அதிகளவு நிக்கல் கலந்திருப்பதால், அதை உபயோகிப்பவர்களின் கன்னம், காது போன்ற பகுதிகளில் தோல் பாதிக்கப்படும் என்கிறார்கள். தோல் சிவப்பாகி, வறண்டு, வெடித்து விட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். பொதுவாக தங்க நகை அணியும் மங்கையர்களுக்கும், பெல்ட் அணியும் ஆண்களுக்கும் ( பெல்ட்டில் இருக்கும் பக்கிலால் ), அதில் நிக்கல் இருப்பதால் அலர்ஜி ஏற்படுவது உண்டு. அம்மாதிரி நபர்கள் மொபைலில் அதிக நேரம் பேசினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொபைல் பட்டன்களை அதிக நேரம் அழுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு விரல்களில் கூட தோல்நோய் வர வாய்ப்பு உள்ளதாம்


No comments: