Sunday, October 12, 2008

அல்போன்சாவுக்கு 'புனிதர்' பட்டம் : போப் வழங்கினார்



வாட்டிகன் சிட்டி: கேரளாவை சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு, வாட்டிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குடமலூரில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி அல்போன்சா பிறந்தார். இவருடைய தந்தை ஜோசப், தாய் மேரி. அல்போன்சாவுக்கு பெற்றோர் இட்ட பெயர் அன்னகுட்டி. இளம் வயதில் பெற்றோரை இழந்த அல்போன்சா, உறவினர் வீட்டில் வளர்ந்தார். 13 வயதில் உமி எரிந்து கொண்டிருந்த குழியில் காலை வைத்ததால், கால் கருகி ஊனமானார்.



கல்லறையில் பல அற்புதங்கள் : 1928ம் ஆண்டு, கன்னியாஸ்திரியாகி அல்போன்சா என்ற பெயர் சூட்டப்பட்டார். ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரிந்த சகோதரி அல்போன்சா உடல் நல குறைவால் ஆசிரியை பணியை கைவிட்டார். நிமோனியா மற்றும் அம்னீஷியா, வயிற்று வலி போன்ற நோய்களால் அவதிப்பட்ட அல்போன்சா 1946ம் ஆண்டு 36வது வயதில் இறந்தார்.அவருடைய உடல் பரணன்கணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த கல்லறையில் பல அற்புதங்கள் நிகழ்வதால் ஏராளமானோர் இங்கு வழிபட ஆரம்பித்தனர்



இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை: கடந்த 1946ம் ஆண்டு, அல்போன்சாவை வழிபட்ட குஞ்சு என்பவருக்கு கால் ஊனம் மறைந்து சரியானது. கடந்த 1999ம் ஆண்டு ஜினிலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு, அல்போன்சா கல்லறையில் வழிபட்டதால் கால் ஊனம் சரியானது. இந்த அற்புதங்களை வாட்டிகன் நகரம் ஏற்றுக்கொண்டு கடந்த 1986ம் ஆண்டு கோட்டயம் வந்த போப் இரண்டாம் ஜான்பால், அல்போன்சாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.இந்நிலையில், ரோமில் உள்ள வாட்டிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடந்த விழாவில், அல்போன்சாவுக்கு, போப் பதினாறாம் பெனடிக்ட்,"புனிதர்' பட்டத்தை வழங்கினார். பைபிள் வாசகத்தை வாசித்து அல்போன்சாவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தார் பெனிடிக்ட். அவர் தன் ஆசியுரையின் முடிவில், "இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. இச் செயலில், ஈடுபடுவோர் அதைக் கைவிட்டு அன்புக் கலாசாரத்தில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக, எல்லாருடனும் சகோதர ,சகோதரிகளாக இணைந்து செயலாற்ற வேண்டும்' என்றார்

இந்த விழாவில், மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கேரள அமைச்சர் ஜோசப், தாமஸ் எம்.பி.,மற்றும் ஏராளமான கன்னியாஸ்திரிகள் உள்பட 5 ஆயிரம் இந்தியர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.இந்தியாவின் முதல் பெண் புனிதர் என்ற பட்டம் பெற்ற பெருமை அல்போன்சாவுக்கு கிடைத்துள்ளது. இனி சகோதரி அல்போன்சா, "புனிதர் அல்போன்சா'என்ற பெயரில் அழைக்கப்படுவார்.

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு (1910 -1946) வரும் 12ம் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படும். எல்லாரும் ஆவலாக எதிர்பார்த்த அன்னை தெரசாவுக்கு முன்னதாக, கேரளாவில் வாழ்ந்த அல்போன்சாவுக்கு இக்கவுரவம் கிடைக்கிறது. கடந்த மார்ச் 1ம் தேதியே இதற்கான முடிவை வாடிகன் நிர்வாகம் எடுத்தபோதும், தற்போது போப் 16ம் பெனடிக்ட் முறைப்படியான அறிவிப்பு வெளியானதும் இந்தியாவின் முதல் பெண் புனிதர் என்ற சிறப்பைப் பெறுவார். அதற்குப் பின் செயின்ட் அல்போன்சா என்று அழைக்கப்படுவார்.



அல்போன்சா, 35 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் உடலை வருத்தும் நோயின் இன்னல்களுக்கு ஆளான போதும், இன்முகத்துடன் காட்சியளிப்பவராகவே வாழ்ந்தார். அவரை வருத்தும் நோய்களைக் குணமாக்க அவர் முயன்றது இல்லை. மற்றவர்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்தது இல்லை. ""இதுபோன்ற ஒரு வித்தியாசமான பண்பு, மனித சமூகம் பார்த்திராத ஒன்று,'' என்று கார்டினல் கிரேசியஸ் ஒரு முறை குறிப்பிட்டார். அல்போன்சா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி கோட்டயத்தில் குடமலூர் கிராமத்தில் ஜோசப் மற்றும் மேரிக்கு அருமை மகளாகப் பிறந்தார். அப்போது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அன்னக்குட்டி.

குடமலூர் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்ட அன்னக்குட்டியை, அவரது பெரிய மாமாவான அருட்தந்தை ஜோசப் வளர்த்தார். 1923ம் ஆண்டு உமி எரிந்து கொண்டிருந்த குழிக்குள் விழுந்ததால், அவர் கால்கள் வெந்துவிட்டன. இதனால், அவர் ஊனமடைந்துவிட்டார். கடந்த 1928ம் ஆண்டிலிருந்து அவர் அல்போன்சா என்று அழைக்கப்பட்டார். 1936ம் ஆண்டில் நிரந்தர உறுதிமொழி எடுத்துக்கொண்ட அவர், சங்கனாச்சேரி திரும்பி ஆரம்பப் பள்ளியில் வகுப்பு எடுத்தார். ஆனால், நோய்வாய்ப்பட்டதால் அவரால் அதை தொடரமுடியவில்லை. பின், பரனன்கணம் சென்றார். தொடர்ந்து அம்னீஷியா பாதிப்புக்கு உள்ளானார்.


கடந்த 1941ம் ஆண்டுக்குப் பின் அவரது உடல்நிலை தேறினாலும் கூட, பின், வயிற்று வலியால் அவதிப்பட்டார். முடிவில் 1946ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி அவர் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். பரனன்கணத்தில் அவருக்கு கல்லறை எழுப்பப்பட்டது. அவரது கல்லறைக்குச் சென்று வழிபடுவோர் அதிசயிக்கும் வகையில் குணமடைவது பற்றி கிறிஸ்தவ சமுதாயத்தில் பலரும் அதிசயிக்கின்றனர். 1985ம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி கவுரவித்தார். 1986ம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது அல்போன்சா கல்லறைக்கும் சென்றார்.


அல்போன்சா நிகழ்த்திய அதிசயங்களில், நடக்க முடியாத ஊனமுற்ற ஒரு வயது ஆண் குழந்தை ஜிலிலுக்கு ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது.
அல்போன்சாவின் கல்லறைக்கு, 1999ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி ஜிலில் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் நன்றாக நடந்தான். க்குழந்தையின் மீது கல்லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அற்புதத்தை 2007ம் ஆண்டு போப் 16ம் பெனடிக்ட் ஏற்றுக் கொண்டார்.


இந்தியாவில் இதற்கு முன்பாக ஒருவருக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. செயின்ட் கார்சியாவுக்கு (1556-1597) கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்து, 1862ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்பின், ஏறத்தாழ 146 ஆண்டுகளுக்குப் பின் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுகிறார். அல்போன்சா மறைந்து 62 ஆண்டுகளுக்குப் பின், வாடிகனில் அக்., 12ம் தேதி நடைபெறும் இப்புனித நிகழ்ச்சியில் கேரள கார்டினல் வார்க்கி வித்யார்த்தில்
உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

கோட்டயம்:கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு வரும் 12ம் தேதி, போப் 16ம் பெனடிக்ட், புனிதர் பட்டம் வழங்க உள்ளார். அதற்காக அல்போன்சாவின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு எலும்புகள் வாடிகன் நகருக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது.இந்த சிறப்பு, இந்தியாவில் வாழ் ந்தவருக்கு முதன் முதலாக வழங்கப்படுகிறது என்பது சிறப்பாகும்.கேரளாவை சேர்ந்தவர் கன்னி யாஸ் திரி அல்போன்சா.
1910ம் ஆண்டு பிறந்த இவர்,35ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தார்.பரனன் கணத்தில் அமைந்துள்ள, இவரது கல்லறையில் வழிபடுவோருக்கு அதிசயிக்கும் வகையில் நோய்கள் குணமா கின. கல் லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அதிசயத்தை, 2007ம் ஆண்டு போப் 16ம்பெனடிக்ட் எற்றுக் கொண் டார்.இதையடுத்து அல்போன்சாவுக்கு வரும் 12ம் தேதி போப் 16ம் பெனடிக்ட், புனிதர் பட்டம் வழங்க உள் ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு, மதர்-ஜெனரல் எஸ்.ஆர்.சிசிலி என்பவர் கத்தோலிக்க பாலா திருச் சபை சார்பாக, புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் வைப்பதற்காக, அல்போன்சாவின் உருவப்படமும், அவரது கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு கை எலும்புகளும் தனித்தனியே இரண்டு பெட்டி களில் வைத்து வாடிகன் கொண்டு சென்றுள்ளார்.
இதில் ஒரு பெட்டியை புனிதர்களின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள, செயின்ட் பீட்டர் அரண்மனையில் வைப்பதற்காக போப்பிடம் கொடுக்கப்படும். மற்றொரு பெட்டி அல்போன்சாவின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்படும்.கேரளாவை சேர்ந்த 10 ஆயிரம் கத்தோலிக்கர்கள் மற்றும் மூத்த கிறிஸ்துவ மதக்குருக்கள் பலர், வாடிகனில் நடைபெறவுள்ள, புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில்


இந்தியாவின் முதல் பெண் புனிதர் பட்டம் பெற்றுள்ள அல்போன்சாவின் கல்லறை அமைந்துள்ள கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பரணங்கானத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் வழி வருமாறு. குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குட்டிக்கானம், முண்டகயம், பாரத்தோடு, காஞ்சிரப்பள்ளி, பின்ணாக்கநாடு, திடநாடு, ஈராட்டுப்பேட்டைவழியாகபரணங்கானம் செல்லலாம். இந்த வழி குமுளியிலிருந்து 127 கி.மீ.,தொலைவாகும்.

கோட்டயத்திலிருந்து பொன்குன்னம், பைகா, பாலா வழியாக 41 கி.மீ., பயணத்தில் செல்லலாம். எர்ணாகுளத்திலிருந்து வைக்கம், ஏற்றுமானூர், பாலா வழியாக 31 கி.மீ., பயணத்தில் செல்லலாம். திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம், சங்கனாச்சேரி, பொன்குன்னம், பாலா வழியாக 130 கி.மீ., பயணத்தில் செல்லலாம். செங்கோட்டையிலிருந்து புனலூர், அடூர், சங்கானாச்சேரி,
பொன்குன்னம், பாலா வழியாக 181 கி.மீ., பயணத்தில் செல்லலாம். பாலக்காட்டிலிருந்து திருச்சூர், அங்கமாலி, தொடுபுலா, பாலா வழியாக 210 கி.மீ., பயணத்தில் செல்லலாம்.

No comments: