Wednesday, November 18, 2009
நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்
தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள். குமார் எங்கு சென்றாலும் அழகுராஜாவை அழைத்துக் கொண்டு தான் செல்வாராம். நேற்று மதியம் நண்பர்கள் இருவரும் அரண்மனைபுதூர் பாலம் அருகே வைகை ஆற்றில் குளிக்கச்சென்றனர். குளித்து விட்டு கரைக்கு வந்தபோது குமாரை, கல் இடுக்கிற்குள் இருந்த ஆறு அடி நீள நல்லபாம்பு கடித்தது. நண்பன் துடித்ததை பார்த்த அழகுராஜா பாம்பை பயமின்றி பிடித்தார். குமாரை ஆட்டோவில் 6 கி.மீ. தூரத்தில் உள்ள தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரி நோக்கி அழகுராஜா ஓடினார். இரண்டு கி.மீ. தூரம் ஓடிய பின் அங்கு வந்த இன்னொரு ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரியை அடைந்தார். அங்கிருந்த நோயாளிகளும், நர்சுகளும் பயத்தில் விலகி ஓடினர். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். டாக்டர்களிடம் பாம்பை காட்டியபின் அழகுராஜா அதை அடித்துக் கொன்றார்.
நண்பனை காப்பாற்றும் வேகத்தில் இருந்த அழகுராஜா, பாம்பை கழுத்தை பிடித்து தூக்கி சென்றதில் பாம்பின் பல் அவர் கையிலும் பதிந்ததை கூட பார்க்கவில்லை. இதை பார்த்த டாக்டர்கள் அவருக்கும் சிகிச்சை அளித்தனர். அழகுராஜா கூறுகையில்; ""நண்பனை பாம்பு கடித்தவிட்டதே என்ற ஆத்திரத்தில், செய்வதறியாது பாம்பை பிடித்துவிட்டேன். கடித்த பாம்பை காட்டினால் தான் அதற்கு தகுந்தாற்போல் டாக்டர் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால், நண்பனை அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டு விட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு எப்படித்தான் அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை' என்றார்.
Labels:
அதிசயம்,
தமிழக சிறப்பு செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வந்துட்டாங்கப்பா....இங்கயும் பைபிள தூக்கிக்கிட்டு...
பைபிள இல்லை பம்பை தான் கையில் தூக்கினார், :))
ஜோசப்
கிறிஸ்தவனே பைபுளே மறந்தாலும், இவிங்க மறக்க மாட்டாயிங்கே போலருக்கே! சும்மா பாம்பு கத சொன்னா கேட்டுகிட்டு போங்கப்பா. எதுக்கு...?
I do not understand this Idiot. where is the word bible mentioned here.
Post a Comment