Wednesday, November 18, 2009

5வது மாடியில் இருந்து குதித்தார் இரண்டு முறை உயிர் தப்பினார்


மெல்போர்ன், : தற்கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போதையேற்றிக் கொண்டு ஐந்தாவது மாடியிலிருந்து 2 முறை குதித்த பிறகும் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரஷ்யாவை சேர்ந்தவர் அலெக்ஸி ரோஸ்கொவ். 22 வயதான இவர் தனது மனைவியுடன் மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருகிறார். இவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 3 பாட்டில் வோட்கா மதுவை குடித்தார். அளவுக்கு மீறி குடித்ததால் போதை தலைக்கு ஏறியது. பின்னர் சமையலறையில் உள்ள ஜன்னலை திறந்து கொண்டு பால்கனிக்குச் சென்று தரையை நோக்கி குதித்தார். திடீரென்று நடைபெற்ற இந்த சம்பவத்தை அவரது மனைவி நேரில் கண்டு பதறினார். ஆனால் சிறிய அளவு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். தள்ளாடியபடியே மீண்டும் மாடிப்படி ஏறி வந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி, அவரை திட்டிக் கொண்டே ஆம்புலன்சை அழைத்தார். இதைக் கேட்ட அலெக்ஸி மீண்டும் கட்டிடத்திலிருந்து தாவி குதித்தார். இந்த முறையும் அவரது முயற்சி பலிக்கவில்லை. பலத்த காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். அதற்குள் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். 5வது மாடியிலிருந்து முதலில் எதற்காக கீழே குதித்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் உயிர் தப்பிய பிறகு மேலே ஏறி வந்த பிறது எனது மனைவி கோபத்துடன் திட்டியதால்தான் இரண்டாவது முறை குதித்தேன். ஆனாலும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதால் உயிர் தப்பினேன்ÕÕ என அலெக்ஸி தெரிவித்தார்.

No comments: