
குடும்ப வறுமை காரணமாக இந்த வேலைக்கு வந்ததாக முத்ராதேவி கூறுகிறார். ஆக்ரா ரயில் நிலையத்துக்கு அதிகாலையும், இரவு நேரத்திலும் அதிக ரயில்கள் வந்து செல்லும் இதனால், இரண்டு ஷிப்டுகளில் முத்ராதேவி வேலை பார்க்கிறார். பெண் என்பதால், எந்த பிரச்னையும் இல்லை என்று கூறும் முத்ரா தேவி, சிவப்பு நிற சுடிதார் அணிந்து லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு லாவகமாக செல்கிறார். பெண் என்பதால் பயணிகள் யாரும் அவரை ஒதுக்குவதில்லை. ஆண் போர்ட்டர்களும் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். கணவரும், 3 குழந்தைகளும் ஒத்துழைப்பதால், வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, போர்ட்ராகவும் வேலை செய்ய முடிவதாக முத்ரா தேவி சொல்கிறார்.
No comments:
Post a Comment