Wednesday, October 15, 2008

விவசாயி செருப்பு 12 கிலோ கின்னசுக்கு தீவிர முயற்சி


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் ஜோடி செருப்பு எடை 12 கிலோ; எப் படித்தான் நடந்து செல்கிறாரோ என ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். கின்னஸ் சாதனை படைக்கும் தாகத்தில் உள்ள இவர், அது பற்றி கவலைப்படுவதே இல்லை! மகாராஷ்டிர மாநிலம், வசாய் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தாஜி டோல்டாட்; வயது 60. இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். ஏதாவது புதுமையாக செய்து, சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணியதன் விளைவு, இவருக்கு செருப்பின் மீது தான் கவனம் பதிந்தது. தன் செருப்புகளை தானே தயாரிக்க ஆரம்பித் தார். முதலில் ஒரு கிலோ எடையுள்ள செருப்பை உருவாக்கினார். அதன்பின், 2 கிலோ, 3 கிலோ, 8 கிலோ எடையுள்ள செருப்புகளை தயாரித்து அணிந்து பழகினார்.


இப்போது அவர் அணிந்திருக்கும் ஜோடி செருப்பு எடை 12 கிலோ. எருமைத் தோலினால் ஆன இந்த செருப்புகளில், பளிச் சிடும் சிறிய விளக்குகளும் பொருத்தியுள்ளார்; சிறிய மணிகளையும் கோர்த்து சலங்கையும் அணிந்துள்ளார். இந்த மெகா எடையுள்ள செருப்பை அணிந்து இவர் நடக் கும் போது, இவரது "ஒலியும் ஒளியும்' செருப்புகளில் இருந்து வண்ண விளக்குகளும் பளிச் சிடும்; கிண்கிணி ஒலியும் எழுப் புவதால், பலரும் வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், துணை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் வந்தபோது, இவர் செருப்பை பார்த்து வியந்தார். "உங்கள் சா தனை முயற்சிக்கு அரசின் பாராட்டுகள் உண்டு' என்று சொல்ல, சான்றிதழும் அளித்தார். உலகில் வேறு எங்கும், யாரும்
இவ்வளவு அதிக எடையுள்ள செருப்புகளை அணிந்ததில்லை. அதனால், கின்னஸ் சாதனை படைக்க முடியும் என்று தாஜி டோல்டாட் நம்புகிறார்.


இவர் கூறியதாவது:என்னிடம் உள்ள எல்லா செருப்புகளும் ஒரு கிலோவுக்கு மேல் தான் எடையுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக, தனி பீரோ வாங்கியுள்ளேன். அவற் றில் அவற்றை பராமரித்து வருகிறேன். அதிக எடையுள்ள செருப் புகளை அணிந்தபோது, கால்களில் கீறல்கள், வெடிப்புகள் விழுந்தன. ஆனால், போகப் போக அவை பழகி விட்டன. இப்போது 12 கிலோ எடையுள்ள செருப்புகளை அணிந்தபோது, சற்று கடினமாக இருந்தது. ஆனால், எல்லாரும் பாராட்டவே, எனக்கு அந்த வலி தெரியவே இல்லை. இந்த செருப்பை தினமும் சோப்பு போட்டு சுத்தம் செய்கிறேன். வாசனை வெளிப்படும் வகை யில் வாசனை திரவியங்கள் கொண்ட "ஸ்ப்ரே'யும் பயன் படுத்துகிறேன். இந்த செருப்புகளை போட்டுக்கொண்டு, தினமும் 8கி.மீ., தூரம் நடந்து செல் கிறேன். அதிக எடையுள்ள செருப்பை போட்டுக்கொண்டு அதிக தூரம் நடந்தவன் என்ற பெருமை நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால், தபால் கல்வி மூலம் ஆங்கிலம் கற்று வருகிறேன். நான் இறந்த பின், "இவன் சாதனை படைத்தவன்' என்று உலகம் பேச வேண்டும். அது தான் என் குறிக்கோள். இவ்வாறு தாஜி டோல்டாட் கூறினார்.

No comments: