
ஐதராபாத்: நம் நாட்டில் 7.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 180 கோடி ரூபாய்.ஐதராபாத் மனித நல கவுன்சிலின் இயக்குனராக இருப்பவர் முகமது ரபியுதீன். இவர் "ஐதராபாத் பிச்சைக்காரர்கள்' என்ற நூலை எழுதியுள்ளார். இதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்காக நாடு முழுவதும் சென்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு நடத்தினார். இதில், தெரியவந்துள்ளதாவது:இந்தியா முழுவதும் 7.3 லட்சம்
பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆண்டில், ரூ.180 கோடி சம்பாதிக்கின்றனர்.
கிடைக்கும் வருமானத்தில், 20 சதவீதத்தை :
ஐதராபாத்தில் மட்டும் 11 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், பிச்சை எடுப்பதன் மூலம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும், இவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவில்லை. இன்னும் வறுமையில் தான் வாடுகின்றனர். பிச்சை எடுப்பதால் கிடைக்கும் வருமானத்தில், 20 சதவீதத்தை மட்டுமே உணவுக்காக செலவிடுகின்றனர். 30 சதவீத வருவாயை தவறான பழக்க வழக்கங்களுக்காக செலவு செய் கின்றனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப் பட் டுள்ளது.
ஐதராபாத்தில் நடந்த விழாவில், தேசிய குழந்தைகள் நல ஆணைய தலைவர் சாந்தா சின்கா இந்த விவரங்களை வெளியிட்டு பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
பிச்சைக்காரர்களின் வாழ்வு மேம்பட, முறையான ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள், இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்து விடுகின்றனர். இதற்கு தீர்வு காண, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, எங்கோ தவறு நடப்பதை சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாறு சாந்தா சின்கா பேசினார்.
1 comment:
எங்கட கொம்பனிக்காரனும் எனக்கு பிச்சை தான் போடுறான்.
Post a Comment