ராமநாதபுரம்: பண்டைய காலத்தில் தூத்துக்குடி கடலில் மூழ்கி முத்து எடுத்தனர். தற்போது ராமேஸ்வரம் பகுதியில் சிறுவர்கள் மூழ்கி காசு எடுக்கின்றனர். ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில், வாகனங்களை நிறுத்தி ரயில் தூக்கு பாலத்தை வேடிக்கை பார்த்தபின் தீவிற்கு செல்வது வழக்கம்.
பெரும்பாலான பயணிகள் பாம்பன் பாலத்திற்கும் தூக்கு பாலத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதிகளில், காசுகளை வீசி எறிந்து விட்டு செல்கின்றனர். கடலில் காசு வீசினால், நன்மைகள் நிகழும் என்பது நீண்ட நாள் ஐதீகம். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வீசும் காசுகளை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கடலுக்குள் குதித்து, மூழ்கி சேகரிக்கின்றனர். இவ்வாறு குதிக்கும் சிறுவர்கள் உப்பு நீரில் இருந்து தங்களின் கண்களை பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். பொதுவாக விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதுபோன்ற நாட்களில் தலா ஒரு சிறுவனுக்கு குறைந்தபட்சமாக 100 ரூபாய் கிடைக்கிறது.
No comments:
Post a Comment