Tuesday, October 21, 2008

ஜூனியர் மாணவனின் தலையில் ஆணி அடித்த சீனியர் மாணவர்கள்


லக்னோ: ஜூனியர் மாணவனின் தலையில், சீனியர் மாணவர்கள் ஆணி அடித்து கொடுமைப்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் மீரட் மாவட்டத்தில் நடந்துள் ளது. உத்தர பிரதேசம் மீரட்டில் உள்ள ஜெயின் இன்டர் கல்லூரியில், இன் டர்மீடியட் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் விகாஸ். ஜூனியர் மாணவனான இவனை, சீனியர் மாணவர்கள் பலர் கடந்த சில நாட் களாக கேலி செய்துள் ளனர். விகாஸ், பெண்கள் போன்று மென்மையான குரலில் பேசியதால், இப்படி கேலி செய்தனர். இந்தக் கேலிப் பேச்சுக்களை சகித்துக் கொண்டிருந்த விகாஸ், சமீபத்தில் சீனியர் மாணவன் ஒருவனை பட்டப் பெயர் சொல்லி அழைத்தான். இதில், சீனியர் மாணவர்கள் எரிச்சல் அடைந்தனர். கடந்த திங்களன்று விகாஸை பிடித்த அந்த மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் ஆளில்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு பிரம்பாலும், ஹாக்கி மட்டையைக் கொண்டும் தாக்கினர்.


அத்துடன் அவனின் தலையை சுவரிலும் மோத வைத்தனர். அதேநேரத்தில், வேறு இரண்டு மாணவர்கள் விகாஸின் தலையில் சுத்தியல் மூலம் ஆணி
அடித்தனர். விகாஸின் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு அடித்ததும், சீனியர் மாணவர்கள் ஓடி விட்டனர். பின்னர் விகாஸ், தனக்கு நேர்ந்த கொடுமையை தன் உறவினருக்கு மொபைல் மூலம் தெரிவித்தான். அவர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, விகாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். விகாஸின் தலையில் அடிக்கப்பட்ட ஆணி, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவன் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டாலும், இன் னும் டாக்டர்களின் கண்காணிப்பில் தான் உள்ளான்.

No comments: