
தஞ்சாவூர்: டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் இண்டஸ்டிரீசின் ஆபரணப் பிரிவான ஈரோடு கோல்ட் பிளஸ், உலகின் மிகப்பெரிய 22 காரட் சுத்தமான வளையலை உருவாக்கியது. ஆயிரத்து 830 மில்லி மீட்டர் குறுக்களவும், 140 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட இந்த வளையலின் எடை 24 ஆயிரத்து 505 கிராம். இதன் மதிப்பு 3 கோடியே 50 லட்சம் ரூபாய்.
இந்த வளையல், நான்கு 22 காரட் வளையங்களின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது. 30 பொற்கொல்லர்கள் இணைந்து, 21 நாட்களில் இந்த
வளையலை உருவாக்கினர். இந்தியா முழுவதும், கோல்டு பிளஸ் கிளைகளில் மக்கள் பார்வைக்காக இந்த வளையல் வைக்கப்பட உள்ளது. சமீபத்தில், தஞ்சாவூர் கோல்டு பிளஸ் கிளையில் வைக்கப்பட்டிருந்த இந்த "மெகா'
வளையலைப் பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.
No comments:
Post a Comment