
பொதுவாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயதுடிப்பு அடங்கி உயிரிழந்து விடுவார்கள். தற்போது அவ்வாறு ஏற்பட்டாலும் கூட பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக “ரினோசில்” என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்றுவிட்ட இதயத்தை மீண்டும் இயக்க வைத்தனர். இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் அவரது குழுவை சேர்ந்தவர்கள் மேற்கொண்டனர். ஐரோப்பாவில் உள்ள 14 ஆஸ்பத்திரிகளில் மார டைப்பால் பாதிக்கப்பட்டு அனுதிக்கப்பட்டிருந்த 200 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர் களில் 182 பேர் உயிர் பிழைத்தனர். 18 பேரை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உயிர் பிழைத்தவர்களில் 83 பேர் 66 வயது முதல் 71 வயது உடையவர்கள். ரினோசில் கருவி பாட்டரியால் இயங்கக் கூடியது.
No comments:
Post a Comment