Thursday, August 5, 2010

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; ரஞ்சிதா தொடர்பு தனிப்பட்ட பிரச்சினை

திருவண்ணாமலையை சேர்ந்த
நித்யானந்தா சாமிகள் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். தமிழகத்தில்
40 ஆசிரமங்கள் இயங்கி வந்தன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும்
நித்யானந்தாவின் ஆசிரம கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
 
கடந்த
6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது
போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பெங்களூர்
பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு நெருங்கிய சீடராக இருந்த லெனின்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, ரஞ்சிதாவுடன் நித்யானந்தா
ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் ரகசியமாக படம் பிடித்தேன் என்று
ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
 
ஒரு
மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில்
போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா
ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது
பணிகளை செய்து வருகிறார்.
 
நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில்
நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று
நித்யானந்தாவை சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு
தெரிவித்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு ஹிலிங் தெரபி
சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்தார்.
 
இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
 
நித்யானந்தா
சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக
இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில்
சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில்
நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
 
தற்போதுள்ள
பிரச்சி னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம்
கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக் கொண்டதுதான்
நீங்கள் செய்த தவறு என்று அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த
முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, சுமார் 200 நாடுகளில்
ஆசிரம கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச்செல்லவில்லை.
கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர்.
வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.
நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார்
அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்.
 
கேள்வி:- ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?
 
பதில்:- அந்த பெண்ணே என்மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது என்றார்.
 
கேள்வி:- ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா?
 
பதில்:-
இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும்
இல்லறத்தில் ஈடுபட்டுக்கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர்.
இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.
 
அதே நேரத்தில்
தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின்
செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை
செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது
மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?
 
கேள்வி:- சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்யானந்தா தமிழ்நாட்டு பக்கமே எட்டிப்பார்க்கவில்லையே? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?
 
பதில்:-
தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது. சென்னையில் உள்ள
பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.
வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார்.
விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன்.
நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
 
பொதுவாக
தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக
உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும்
தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50
ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
 

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

No comments: