சிவகங்கை அருகே பையூர் பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். இந்த மக்கள் நோயின்றி வாழவும், பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், அங்குள்ள மதுரை வீரன், காளியம்மன், மீனாட்சியம்மன் தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்துகின்றனர். இதற்காக பூசாரிகள் ரஞ்சித், சந்திரன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் 58 நாட்கள் விரதமிருந்தனர். இந்த ஆண்டு விழா கடந்த வாரம் தொடங்கியது. சிவகங்கை தெப்பக்குளத்திலிருந்து நேற்று முன்தினம் அலகு குத்தி பால்குடம் சுமந்து, ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் 7 பானைகளில் பொங்கல் வைத்து, காவல் தெய்வங்களை வழிபட்டனர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காளியம்மன் முன்பு, 23 எருமைகளை பலியிட்டு, அவற்றின் ரத்தத்தை குடித்தனர். நோயின்றி வாழ குழந்தைகளுக்கும், எருமை ரத்தத்தை குடிக்க கொடுத்தனர்.
மேலும், ஒரு எருமைக்கு 3 வெள்ளாடுகள் என்ற கணக்கில், 69 வெள்ளாடுகளையும், பலியிட்டு பூஜை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை பலியிடப்பட்ட எருமை தலைகளை தட்டில் ஏந்தி, ஊர்வலம் செல்லும் மது எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.



No comments:
Post a Comment